Friday 8 April 2011

திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி: அன்பழகன் விளக்கம்!






சென்னை, ஜன.3_ திராவிட பல்கலைக்கழக அனுமதி கேட்க சென்ற-வர்களிடம் திராவிட என்ற சொல்லை நீக்கு-மாறு அப்போதைய மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்-ளார். ச.வே.சுப்பிரமணியன் எழுதிய 81 நூல்கள் வெளி-யீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் நூல்களை வெளியிட நல்லி குப்பு-சாமி பெற்றுக் கொண்-டார். பின்னர் அன்பழ-கன் பேசியதாவது:

திராவிட பல்கலைக்கழகம்: தமிழறிஞர் வ.அய்.சுப்பிர-மணியம் ஆந்திர மாநி-லம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அர-சின் ஒப்புதல் கேட்டு அப்போதைய கல்வி அமைச்சர் முரளி மனோ-கர் ஜோஷியை சந்தித்-தார். அனுமதி கொடுத்து விடுகிறேன். திராவிட என்ற பெயரை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று ஜோஷி கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியம், தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் நீக்கிவிட்டால், இந்த பல்கலைக்கழகத்தில் வரும் திராவிட என்-பதையும் நீக்கி விடுகி-றோம் என்று பதில-ளித்தார். ஜோஷி வாய-டைத்து போனார். தமிழ் செம்மொழி ஆனதை கேட்டு நெஞ்சடைத்து போயிருக்கும்.
நான்கு வர்ணம் இல்லை: உலக பொதுமறை தொல்காப்பியம் என்று ச.வே.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திருக்குறள்-தான் உலக பொதுமறை. தொல்காப்பியம் தமிழர்-களின் பெருமைக்குரியது. எழுத்து, சொல், ஆகிய-வற்றை வடமொழிக்கு தமிழே கடன் தந்தது.
வடமொழிக்கு எழுத்தே கிடையாது. அது இந்தோ _ அய்-ரோப்பிய எழுத்து என்கிறார்கள். ஆனால் அந்த வகை எழுத்து-களுடன் வடமொழி எழுத்து ஒத்துவர-வில்லை. தமிழுக்கு செம்-மொழி தகுதியை பெற்று தருவதில் முதலிடம் வகிப்பது தொல்காப்-பியம். தமிழனின் மரபு என்று பிரித்துக் காட்டி மாற்றாக வருவதையெல்-லாம் அன்னியம் என தவிர்த்து பாதுகாக்கவே தொல்காப்பியம் தோன்றி-யது. தொன்மையான இந்த நூலும் இடைத்-செருகலுக்கு ஆட்பட்டி-ருக்-கிறது, அதை மறுக்க முடியாது. வேற்று கலாச்-சார கருத்துகளும் அப்-படி இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்-தில் மேல் மக்கள் உண்டு, மேல் ஜாதி இல்லை. நான்கு வர்ணம் இல்லை, மனு ஸ்மிருதி இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின-ருக்கு திருமண உரிமை இல்லை. அவர்கள் இணைந்து மட்டும் வாழ-லாம் என்ற வைதீக கலாச்சார கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம்-பெற்றுள்ளன. இடைச் செருகல்களை களைந்து தனித் தமிழ் படைப்பாக தொல்காப்-பியத்தை ச.வே.சுப்பிர-மணியன் ஆக்கித்தர வேண்டும். ஆந்திர, கர்-நாடக பகுதிகளில் பழந்-தமிழனின் தொடர்ச்சி இல்லாதலால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகிவிட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு அது வளர்ந்து விட்டது. இவ்வாறு க. அன்-பழகன் பேசினார். ச.வே.சுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம், சிலம்-பொலி செல்லப்பன், முன்-னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, அறவாணன் உள்பட பலர் பேசினர்.

thank: viduthalai.periyar.org.in

No comments:

Post a Comment