Friday 8 April 2011

கொரிய மொழியும் - தமிழும் பின்னிப் பிணைந்தவை கொரிய மொழி கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் உரை

சென்னை, ஆக. 13_ சென்னை ஆசியா நிறு-வனத்தின் சார்பில் நடத்-தப்படும் கொரிய மொழி இலக்கியக் கருத்தரங்-கினை 12.8.2009 அன்று தமிழக அரசு கண்காட்-சிப் பேரரங்கில் துவக்கி வைத்து நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:
உலகச் செம்மொழி-களுள் ஒன்றான தமிழ் மொழியின் வேர்களும், விழுதுகளும் பாரெங்கும் வழங்கும் மொழிகள் பல-வற்றிலும் பரந்து படர்ந்து உள்ளன. கிரேக்கம், எபி-ரேயம், அராமைக், ஏலா-மைட், அராபிக், பர்சியன் போன்ற ஏராளமான ஆசிய மொழிகளில் வர-லாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஏற்பட்டுள்ள தமிழின் தாக்கம் பற்றி தொடக்க நிலையில் ஆய்ந்து கண்ட ஆய்வாளர்-களின் ஆய்வு முடிவுகள் வெறும் கருதுகோள்களா-கவே கருதப்பட்டு வந்தன. தற்போது அவையனைத்-தும் உண்மை என்பது தகுந்த சான்றுகளோடு நிறுவப்படும் நிலை அரும்பி வருகிறது.
ஆசியாவில் நிறுவனத்-தின் இயக்குநர் டாக்டர் ஜி.ஜான் சாமுவேல் இயற்-றியுள்ள செம்மொழி-களின் வரிசையில் தமிழ் என்னும் ஏட்டில் எடுத்-துக் காட்டி வரைந்துள்ள உண்மை இது.
ஆரியர்கள் இந்தியா-விற்கு வருவதற்கு முன்-னரே தமிழர்கள் இங்கு இருந்தனர் என்பது தெளிவு. திராவிட மொழி பேசுவோர், சீன திபெத்-திய மொழி பேசுவோர், ஆஸ்ட்ரிக் மொழி பேசு-வோர் ஆகியோர் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்-தியாவில் வாழ்ந்த போதி-லும், இன்றைய இந்தியப் பண்பாட்டில் நூறில் 50 பங்குக்கு மேல் திராவிடர்-களுடையதே என்கிறார் பன்மொழி அறிஞரும் சிறந்த ஆராய்ச்சி வல்லுந-ரு-மான எஸ்.கே.சட்டர்ஜி அவர்கள்.
திராவிடத்தின் தொன்-மைக்குச் சான்றாக உள்ள தமிழ்மொழி_ - இன்றள-வும் அதன் அடிப்படைக் கூறுகளை - சிறப்புகளை இழக்காமல் தொடர்வ-தும், பேச்சு வழக்கில் நில-வுவதும் அதன் பெருமைக்-கும் மேன்மைக்கும் சான்-றாகும்.
தமிழ் மொழி செந்-தமிழ் என்று அழைக்கப் படுவதில் இருந்தே - அது ஒரு செம்மொழித் தகுதி உள்ளதாக வளர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்ப் புலவர்கள் ஆர்வம் கொண்-டிருந்ததை எடுத்துக் காட்-டும். இதனை விவரிக்கும் டாக்டர் சாமுவேல் எடுத்-துக் காட்டுவது இது.
பண்பாட்டுக் கலப்பு-கள் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தங்களும் வாய்ப்-புகளும் ஏற்பட்ட போது, தமது பண்பாடு தனித்-தன்மை வாய்ந்தது என்-பதை மனத்திற் கொண்டே தமிழ்ப் புலவர்கள் செயல்-பட்டு வருகின்றனர்.
தமிழ் மொழியிலான சீரிய ஒலியமைப்பு, சொல்-லமைப்பு, தொடரமைப்பு ஆகியன செவ்வியல் தன்-மைக்குத் தக்க எடுத்துக் காட்டாக அமைகின்றன. அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டுள்ள இத்-தகைய இலக்கண வரை-முறைகள் இன்றைய மொழியியல் வல்லுநர்-களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. மிகப் பழைய காலத்திலேயே இது செவ்வியல் நிலை-யினை அடைந்து, திரா-விட நாகரிகத்தின் உயர்-தனிச் சிறப்பை உலகிற்-குக் காட்டும் சான்றாக நிலை பெற்றுவிட்டதா-கக் கில்பர்ட் சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்-பிடுகின்றார். அவர் கருத்-துப்படி கிரேக்கர்களோடு தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே, தமிழ் மொழி இத்தகைய செவ்வியல் நிலையினை அடைந்திருக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தில் வடவர் பண்பாட்டின் தாக்கம் கூடப் பெரும்-பாலும் பிராகிருத மொழி வழியாகவே ஏற்பட்டுள்-ளது. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்-வெட்டுகளிலும் பிராகிரு-தமே காணப்படுவது இக்-கருத்தை உறுதி செய்கின்-றது. தமிழ் இலக்கியம் முழு வளர்ச்சி அடைந்த-பின்னரே சமஸ்கிருதத்-தின் தாக்கம் தமிழ் இலக்-கியத்தில் நேரிடையாக ஏற்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பிலியோசா. தமிழ் இலக்கியம் முழு வளர்ச்சி பெற்ற பின்ன-ரும் சமஸ்கிருதச் சொற்-களைக் கடன் வாங்குவ-தில் பழந்தமிழ்ப் புலவர்-கள் தயக்கம் காட்டியே வந்துள்ளனர் என அறிகி-றோம். வடமொழிச் சொற்-களைக் கடன் வாங்-கும் நிலை ஏற்பட்ட-போது தமிழ் மொழி ஒலியமைப்பிலிருந்து மாறு-படும் சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து, தமிழ் மொழியின் ஒலிய-மைப்போடு ஓரளவு இணைந்து செல்லும் பிராகிருத, பாலி மொழிச் சொற்களையே பழந்-தமிழ்ப் புலவர்கள் கட-னாகப் பெற்றுள்ளதைக் காண்கின்றோம். இத்த-கைய நிலையினைத் தமிழ்ப் புலவர்களால் படைக்கப்பட்ட பவுத்த, சமண சமயக் காப்பியங்-களில் அதிகமாகக் காண-முடிகிறது.
தமிழ் இலக்கணத்தில் - சமஸ்கிரும் வடமொழி என்று வழங்கப்பட்டதன் மூலம் தென்மொழி தமிழ் - என்னும் கருத்து நிலவியதை அறியலாம். வடபுலத்தில் செல்வாக்கு பெற்ற மொழி வடமொழி என்று கருதினரேயன்றி, தமிழினை விட உயர்ந்த மொழி என்றோ - தேவ-பாஷை என்றோ, இறை-வன் வழிபாட்டுக்குரிய மொழி என்றோ -_ தமிழ் மொழிவாணர்கள் ஏற்கவில்லை என்பதைத் தெளியலாம். இதனை விளக்கி டாக்டர் சாமு-வேல் கூறுவது இது:
பிற திராவிட மொழி-கள் பிற்காலத்தில் வட மொழியின் தாக்கத்தை வரவேற்ற போதிலும் அதனை மிகவும் தவிர்த்-துள்ள மொழி தமிழே என்பது வெளிப்படை. வடசொற்களைக் கடன் வாங்கும் நிலை ஏற்பட்-டால் கூட அவற்றைத் தமிழின் ஒலியமைப்பிற்கு ஏற்ப மொழியாக்கம் செய்துதான் பயன்படுத்த வேண்டுமென்று தொல்-காப்பியம் வரையறை செய்வதைக் காண்கின்-றோம். வட சொற்கிளவி வடஎழுத்தொரீஇ, எழுத்-தோடு புணர்ந்த சொல்-லாகுமே என்பது தொல்-காப்பியத் தமிழ் நெறி. சங்க இலக்கியங்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் வடமொ-ழித் தாக்கமின்றியே தமிழ் மொழி இயங்கு-கின்றது. வடவர்களின் மொழி, பண்பாடு, இலக்-கி-யம் ஆகியன தம் மொழி, பண்பாடு, இலக்-கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவை என்ப-தைத் தெள்ளத் தெளி-வாக உணர்ந்து தமிழ் அறிஞர்கள் தம் பண்-பாட்டின் உயர்வு பற்றிய ஒருவிதப் பெருமித உணர்-வுடன் தொடக்கக் காலத்-தில் இருந்தே தமிழ் இலக்கிய இலக்கண மர-புகளை செவ்வியல் நிலைக்-குத் தரப்படுத்தும் முயற்சியால் ஈடுபட்டி-ருந்தனர். தமது பண்பாட்-டுக் கூறுகளை வடவர்-களின் பண்பாட்டு மரபு-களோடு ஒப்பிட்டு வேறு-படுத்திக் காட்டித் தமிழ்ப் பண்பாட்டின் தனித் தன்-மைகளை நிறுவுவதில் பழந்தமிழ் அறிஞர்கள் அதிக ஆர்வம் காட்டி-னர்.
நடு ஆசிய மொழிகள், உரல் அல்டாயிக் மொழி-கள் ஆகியன தமிழோடு உறவு கொண்ட மொழி-கள் என்பதை டாக்டர் கால்டுவெல் 1856 இல் வெளிவந்த அவரது ஆய்வு ஏட்டில் தெளிவாகக் கூறிச் சென்றார். உரல் அல்டாயிக் மொழிக் குடும்பத்தில் கொரிய மொழி, ஜப்பானிய மொழி, ஹங்கேரிய மொழி, சீன மொழி ஆகியன தலை-மை-யிடத்தைப் பெறுகின்-றன. தமிழ் - ஜப்பானிய உறவு பற்றி மிகப் பெரிய ஆய்வுகள் ஜப்பானிய மொழி நூல் அறிஞர் டாக்டர் சுசுமோ ஓனோ போன்ற பெருமக்களால் தமிழறிஞர்களின் துணை-யோடு சிறப்பாக மேற்-கொள்ளப்பட்டு வரு-கின்றன. இந்த ஆய்வுகள் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்ததன் விளை-வாகப் பல அரிய கண்டு-பிடிப்புகள் கிடைத்துள்-ளன. தமிழ் நாட்டுப் பொங்கல் திருவிழாவுக்-கும், ஜப்பானிய நாட்டு அறுவடைத் திருநாளான கோசுட்சுக்கும் இடையே-யுள்ள உறவும், ஒற்றுமை-யும் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. கோனோ போன்ற ஜப்-பானிய இளம் அறிஞர்-கள் ஆசியவியல் நிறுவ-னத்-தில் இவைபோன்ற ஆய்வில் இப்போது தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டிற்-குரியது.
அல்டாயிக் குடும்ப மொழிகளுள் ஒன்றான கொரிய மொழிக்கும், தமிழுக்கும் இடையே-யுள்ள உறவு அழுத்த-மான வரலாற்றுப் பின்-னணிகளைக் கொண்டுள்-ளது. இந்திய நாட்டுப் பெண் ஒருத்தி கொரிய நாடு சென்று, கொரிய நாட்டு இளைஞனை மணந்து கொரியப் பேர-ரசைத் தோற்றுவித்ததாக ஒரு வழிவழி மரபுச் செய்தி உள்ளது. இந்தப் பெண் அயுத் என்ற இந்-திய நாட்டுப் பகுதியி-லிருந்த சென்றதாகப் பழைய கொரிய ஆவணங்-கள் குறிப்பிடுவதால், இது பழங்கால அயோத்தியா-கத்தான் இருக்க வேண்-டும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் கொரிய நாட்டு மக்களால் தம் நாட்டின் முதல் அரசிக்கு நினைவிடமும் கட்டப்-பட்டுள்ளது. அயுத் என்பது தமிழ்நாட்டுப் பகுதியாகத்தான் இருக்க முடியும் என்று கருது-கோளில் பல ஆய்வுகள் தற்-போது நடந்து வரு-கின்றன.
கொரிய - தமிழ் உறவு பற்றிய கால்டுவெல்லின் கருத்தைத் தொடர்ந்து பல அறிஞர்களும் இவ்-விரு மொழிகளுக்கிடை-யேயுள்ள தொடர்பு பற்றி ஆய்ந்துள்ளனர். கொரிய மன்னர் அவையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய ஹீயுபர்ட் (Hubert) என்ற அமெரிக்-கர் திராவிட மொழிக-ளுக்கும் கொரிய மொழிக்-கும் இடையேயுள்ள உறவு பற்றி ஓர் அருமை-யான சிறு நூல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் படைத்துள்ளார். தமிழ்ப் புலமை மிக்க கொரிய அறி-ஞர்களை நாம் உரு-வாக்கத் தவறி விட்டதா-லும், கொரிய நாட்டு அறிஞர்களோடு இணைந்து தமிழ் கொரிய மொழி ஒப்பாய்வில் (Comparative philosophy) நாம் ஈடுபடாததாலும் இத்துறையில் குறிப்பிடத்-தக்க நல்ல ஆய்வுகள் தோன்றவில்லை. எனி-னும் கனடா நாட்டில் தமிழ்ச் சங்கம் ஒன்றினை நிறுவி கொரிய - தமிழ் உறவு பற்றி முழுநிலை-யில் ஆய்வு செய்யும், கொரிய நாட்டுத் தமி-ழறிஞர் பேராசிரியர் ஜம் நம் கிம் இத்துறையில் ஆற்றியுள்ள ஆய்வுப் பங்களிப்பு குறிப்பிடத்-தக்கது. ஆசியவியல் நிறு-வனம் நடத்திய தமிழ்ச் செம்மொழி பற்றிய பன்-னாட்டுக் கருத்தரங்கில் இப்பொருண்மை குறித்து நல்ல பல ஆய்வுரைகளை பேராசிரியர் ஜம் நம் கிம் தந்துள்ளார்.
இப்போது தென்-கொரிய அரசு நிறுவன-மான கொரிய அறக்கட்-டளை (ரிஷீக்ஷீமீணீ திஷீஸீபீணீவீஷீஸீ) ஆசியவியல் நிறுவனத்-தோடு இணைந்து இத்-தகைய அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது வரவேற்-கத்தக்கது. 2007 ஆம் ஆண்டில் கொரிய பண்-பாட்டுக் கலை _ பாரம்-பரியம் பற்றிய கருத்தரங்-கினை இவ்விரு நிறுவ-னங்-களும் இணைந்து சென்-னையில் நடத்தின. இது இந்திய நாட்டில் இப்-பொருண்மை குறித்து நடத்தப்பட்ட முதல் பயிலரங்காகும். இதன் தொடர்ச்சியாக கொரிய மொழி- இலக்கியம் பற்-றிய அடுத்த பயிலரங்கங்-களினை இப்போது நடத்-துவது மகிழ்ச்சி தருகின்-றது.
சென்னையில் 100_க்-கும் மேற்பட்ட பெரிய, சிறிய கொரியத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல கொரிய நாட்டுக் குடும்-பங்களும் இங்கு வாழ்கின்றன. கொரியா என்றால் மின்னணுப் பொருள்கள் (Electronics) மற்றும் கார் உற்பத்தி என்று மட்டும் நினைத்-துக் கொண்டிருந்த தமி-ழர்களுக்குக் கொரிய மொழியின் நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணி யினையும் அத்தகைய வர-லாற்றுப் பின்னணியு-டைய கொரிய மொழியு-டன் தமிழ் மொழி பின்-னிப் பிணைந்துள்ள நிலையினையும் கொரியப் பண்பாட்டுப் பெருமை-யினையும், கலைத்துறை-யில் அந்நாடு ஏற்படுத்தி-யுள்ள சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவும், கொரிய தமிழ்-நாட்டுத் தொடர்பில் உருவாகும் நட்புறவும் பெருகி வளரவும் இவை-போன்ற பயிலரங்குகள் துணை புரியும் என்பதில் அய்யமில்லை. தமிழ் மொழி பண்பாடு, இலக்-கியம் ஆகியவற்றைக் கொரிய மொழி பண்பாடு, இலக்கியம் ஆகியவற்-றோடு ஒப்பிட்டு நிகழ்த்-தப்-படும் பல நல்ல ஆய்-வுகள் மலரவும் இந்தப் பயிலரங்கம் வலுவான அடித்தளம் அமைக்கும் என உறுதிபட நம்புகி-றேன்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள தமிழகத்து அறிஞர்-களையும், கொரிய மொழி ஆய்வு அறிஞர் பெருமக்-களையும் அன்புடன் வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் உரையாற்-றினார்.

நன்றி-விடுதலை

No comments:

Post a Comment