Friday 8 April 2011

ஏழை - எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பது கேலிக்குரியது அல்ல!






சென்னை, பிப்.11- ஏழை - எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பதுபற்றி கேலி செய்வது குறித்து நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்ப ழகன் அவர்கள் பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்மீது கடந்த சில நாட்களாக நடந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று (10-2-2011) பதிலளித்துப் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

அரசின் திட்டங்கள் எல்லாம் தோல்வி என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருக் கின்றன.

தொழிலாளர்களுக்கு செய்த நன்மைகள் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ஆகியவை எல்லாம் தோல்வியா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வருவாய் கணக்கில் செய்யப்படும் செலவு, உபரியாக இருக்கும் அளவுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடன் சுமை அளவோடு ஏறுமானால், மூலதனக் கணக்கில் செய்யப்படுகிற செலவு அத்தனையும் சமுதாய கட்டுமானப் பணிகளுக்காக, சமூகநலப் பணிகளுக்காக இருக்குமானால், அது சமு தாயத்துக்கு நன்மை செய்யும் காரணத்தால், அது விரும்பத்தக்க கடன்தான். நம்மைப் பார்த்து கடன் வாங்காதே என்பவர்களும் அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலத்தில் கடன்தான் வாங்கினார்கள்.

நாங்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்து விலகுகிறபோது ரூ.28 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதை குற்றமாக கூறியவர்கள் ஆட்சிக்கு வந்து, அந்த ஆட்சி நீங்கியபோது அவர்கள் விட்டுச் சென்ற கடன் ரூ.56 ஆயிரம் கோடி. இன்றைக்கு அது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உற்பத்தி, வரி, வருவாய் பெருகியிருக்கிறது. பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் தொகுப்பு நிதியில் நமக்குள்ள பங்கு கூடியுள்ளது. எனவே கடன் அதிகமானது, எந்த வகையி லும் குறைகூறக் கூடியது அல்ல.

இந்த கடனால் தமிழகம் வாழ்கிறது என் றேன். அந்த `வாழ்கிறது' என்ற வார்த்தையை தவறான கருத்தில் கூறினர். `வளர்கிறது' என்ற அர்த்தத்தில் பேசினேன்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ன?

விலைவாசி உயர்வுக்கு இயற்கையே முதல் காரணம். அடுத்ததாக தேவையின் மிகுதி, பங்கீட்டுக்கான வாய்ப்பு, பங்கீட்டின் போது கைமாறும் நிலையில் ஏற்படும் மாற்றம் போன்றவைகளால் விலை ஏற்றம் ஏற்படு கிறது. உலகம் முழுவதும் இடைத்தரகு உள்ளன. அந்தத் தொழிலும் வாழ வேண்டும். விலைவாசி ஏறினாலும் இறங்கினாலும் ஒரு தரப்பினருக்கு பாதிப்பில்லை.

ஆனால், சாதாரண மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது. எனவே விலைவாசி ஏற்றத்தின் போது இவர்களுக்கு பட்டினி, பசி போன்ற பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பது அரசின் கடமை. அதனடிப்படையில்தான் அரிசி, எண்ணெய், பருப்புகள் போன்ற வற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குகிறோம். மற்றவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை, பட்டினி இல்லை. இதன் மூலம் விலைஏற்றத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் தவிர்க்க முடியா தது. விலை ஏற்றத்தினால் வரும் பாதிப்பை இந்த அரசு பெருமளவில் தடுத்துள்ளது. உணவுப் பண்டங்களின் விலையை குறைப் பதற்காக ரூ.4 ஆயிரம் கோடி மானியம் வழங்கி, அதை கட்டுப்படுத்தி வைக்கிறது.

தொழில் வளர்ச்சிகள் ஏற்பட்டாலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதை கவனிக்கும் முறை இந்த அரசிடம்தான் உள்ளது. உணவுப் பண்டங்களில் விலையைக் குறைத்து மக்க ளுக்கு கிடைக்கச் செய்யும் காரியத்தில் இந்தி யாவில் வேறு எந்த அரசும் இந்த அளவுக்கு ஈடுபடவில்லை. இலவசத்தை கேலி செய் கிறார்கள். ஆனால் இலவசம்தான் ஏழை யைக் காப்பாற்றுகிறது. பட்டினியைப் போக்கி, சமூகநல திட்டத்தின் அடிப்படை யாக இருப்பது இலவச திட்டங்கள்தான்.

வளர்ந்த நாடுகளில் வேலையில்லாதவர் களுக்கு ஊதியத்தையே இலவசமாக வழங்கு கிறார்கள். எனவே இலவசம் கேலிக்குரிய தல்ல. ஒரு காலகட்டத்தில் பெருமையாகக் கருத்தப்பட்ட தானதர்மம் தான் அந்த இல வசம். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் அது சூட்சுமத்தோடு அரசு கொடுப்பதாக ஒரு தவறான கருத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். மூலதனச் செலவுக்காக பயன்படுத்த வேண் டிய கடன் தொகையில் இருந்து இலவசங் களை அரசு வழங்கவில்லை.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- பெட்ரோல் விலை உயர்வுதான் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம். உலக அளவில் உயர்வதாகக் கூறினாலும், அருகில் உள்ள நாடுகளில் பெட்ரோல் விலை ஏறவில்லை. ஏன் இந்தியாவில் மட்டும் உயர்கிறது? அதை இங்குள்ள தனியார் நிறுவனங்கள் உயர்த்து கிறார்கள். பெட்ரோல் கண்காணிப்பு குழுவில் மத்திய ரசாயனத்துறை அமைச்சரும் இடம் பெற்றிருக்கிறார். பெட்ரோல் விலை உயர்வு எங்களை பாதிக்கிறது என்று ஏன் கூட்டத்தில் அதை தெரிவிக்கவில்லை?

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை

அமைச்சர் க.அன்பழகன்:- அது அரசின் கொள்கை. பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சாதாரண மக்கள் பேருந்தில் பயணிக்கும் போது பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் 5 ஆண்டு கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. வசதியுள்ளவர் பெட்ரோல் வாங்குவது பற்றி யார் கவலைப்பட வேண்டும்? ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என்றபோதுதான் நாங்கள் கவலைப்பட வேண்டுமே தவிர, வசதியுள்ளவர்களுக்கு விலையை குறைத்துத் தர வேண்டும் என்பது கட்டாயமில்லை.

வெளிநாட்டில் இருந்து வரும் பொருள்களின் விலைவாசி உயரத்தான் செய்யும். கார் விலை எவ்வளவோ கூடியுள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் காரில் செல்லாமலா இருக்கிறார்கள்?

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- விலைவாசி ஏற்றத்தை நியாயப்படுத்திவிடக் கூடாது என்பதைத் தான் நான் கவலையோடு சுட்டிக்காட்டுகிறேன். கட்டுப்படுத்துவோம் என்ற ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா?

அமைச்சர் க.அன்பழகன்:- யாருக்காக கட்டுப் படுத்த வேண்டுமோ அவர்களுக்கு கட்டுப்படுத்து கிறோம். யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு ஏன் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்?

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):- நாங்கள் விலை குறைந்த டீசல் காரில்தான் செல்கிறோம். ஆனால் ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடுகின்றன. அதில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.

அமைச்சர் நேரு:- அதற்காகத்தான் சென்னையில் கியாஸ் ஆட்டோக்களை விட்டிருக்கிறோம்.

அமைச்சர் க.அன்பழகன்:- தமிழகத்தில்தான் பயங்கரவாதம், நக்சலைட்வாதம், வன்முறைகள் இல்லை. தனிப்பட்ட முறையில் நடக்கும் குற்றங்களின் புள்ளிவிவரங்களை கணக்கிட்டால் கடந்த காலத்தில் நடந்ததைவிட குறைவுதான்.

பக்கத்து மாநிலங்களில் நடந்த குற்றங்களின் விகிதாச்சாரத்தைவிடவும் குறைவுதான். கடந்த ஆட்சி காவல்துறையை விட இந்த கால காவல்துறை சிறப்பாக, திறமையாக செயல்படுகிறது. 80 சதவிகித குற்றங்கள், திருட்டுப் பொருட்கள் மீட்பு கண்டுபிடிக்கப்படுகின்றன.

முதலமைச்சரைப் புகழக் கூடாதா?

தமிழ் செம்மொழி மாநாடு, முதலமைச்சரை புகழ்வதற்காக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஏன் முதல்-அமைச்சரை புகழக் கூடாதா? அரசியல் வாடையே இல்லாமல் நடந்து முடிந்ததாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. ஆனால் தஞ்சையில் நடந்த மாநாடு எப்படிப்பட்ட அலங்கோலத்தோடு நடத்தப்பட்டது? அதற்காக அழைக்கப் பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஈழத்தில் இருந்து வந்த அறிஞர்களும் கலந்து கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அன்று வைக்கப்பட்ட கட்-அவுட் எல்லாம் அந்த முதலமைச்சருக்குத்தான். தஞ்சைப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை அறிவித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. எல்லாவற்றிலும் ஊழல். அதற்காக விசாரணை. விசாரணை முடிவில், தவறான முறையில் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. தஞ்சை மாநாடு போல கோவை மாநாடு நடக்கவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment