Friday 8 April 2011

குறிப்பு

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொது செயலாளராக உள்ளார்.

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19-12-1922 அன்று மகவாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

பொது வாழ்க்கை
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், பெரியாரின் அடியொற்றி நடப்பவரும் ஆவார்.
”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.

எழுத்துப் பணி
எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய பேசும் கலை வளர்ப்போம்,(பிரபல வாரப்பத்திரிகையில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தொடர் கட்டுரையாக வெளி வந்த்து), தமிழர் திருமணமும் இனமானமும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
பிற நூல்கள்;
  • உரிமை வாழுது
  • தமிழ்க்கடல்
  • அலை ஓசை
  • விடுதலைக் கவிஞர்
  • தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
  • இன-மொழி வாழ்வுரிமைப் போர்
  • தமிழினக்காவலர் கலைஞர்
  • நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
  • தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
  • விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
  • பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்
நன்றி விக்கிப்பீடியா

No comments:

Post a Comment