Friday 8 April 2011

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்கவிழா உரை

கடவுள் இல்லை! குடி குடியைக் கெடுக்கும்! திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்கவிழா!

தமிழர் உரிமைக்காகவும் நலனுக்காகவும் ஓங்கிக் குரல்கொடுக்கப் புதிய இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் சுப.வீயைத் தலைவராகக் கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தொடக்க விழா ஜனவரி 22-ஆம் நாள் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்தப் பேரவையைத் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இளைஞர்கள் நிறைந் திருந்த அந்த அரங்கம், தமிழின எதிர் காலத்தின்மீதான நம்பிக்கையை அதிகப்படுத் தியது. இன உணர்வு மிகுந்திருந்த அந்த விழாவிலிருந்து...

பேராசிரியர் அன்பழகன்
தமிழ் மொழியை முழு அளவில் நற்றமிழாகக் காப்பாற்ற, இன உணர்வைப் பெருக்க இந்தப் பேரவைப் பெரியஅளவிலே பயன்படும் என நான் நம்புகிறேன். உண்மை யாகவே அரசியலில் பல கடமைகளை ஆற்ற வேண்டியிருக்கிறது. அந்தக் கடமைகளை ஆற்றவேண்டியபோது சமுதாயக் கடமை யிலே ஏற்படுத்த வேண்டிய ஆழமான உள் உணர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை. சமுதாயத்திலே ஏற்பட வேண்டிய முதல் கருத்து, ஜாதி ஒழிக்கப்படவேண்டும். என் னுடைய மனத்திலே ஜாதி உணர்வு இருக்குமானால் அந்த உணர்வு ஒழிக்கப் படவேண்டும். அடுத்தவனுடைய ஜாதியை ஒழிப்பதினாலே ஜாதி ஒழிந்துவிடாது. எல்லோரும் ஓர் குலம் என்கிற பரந்த மனப்பான்மை, ஜாதி என்ற சொல்லே தமிழுக்குரியதல்ல என்று வெறுக்கின்ற அந்த நோக்கம் இவையெல்லாம் சேர்ந்து நாம் திராவிட உணர்வுள்ள தமிழர்கள் என்பதை வலியுறுத்தத்தான் இந்தத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என நான் உளமாரக் கருதுகிறேன்.

No comments:

Post a Comment